Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை: வழி விடாததால் ஆட்டோ டிரைவர் கொலை

செப்டம்பர் 29, 2019 04:08

கோவை : கோவையில் டூவிலருக்கு வழிவிடாமல் சென்ற ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் சரணவம்பட்டி பகுதியில் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றது. டூவிலரில் வந்த இருவர், ஆட்டோவை முந்திச்செல்ல முயன்றபோது ஆட்டோ டிரைவர் வேகமாக ஓட்டினார். இதனால் இரண்டு வாகனமும் ஒரே வேகத்தில் சென்றது. 

ஆத்திரமடைந்த இளைஞர்கள் முந்திசென்று ஆட்டோவை மறித்தனர். டிரைவர் அருண் பிரசாத்தை தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கினர். படுகாயமடைந்த அருண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாகனத்திற்கு வழிவிடாதது கொலையில் முடிந்ததை எண்ணி பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து சிலர் எடுத்த வீடியோவின் அடிப்படையில் அந்த இளைஞர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்